செய்திகள் வணிகம்
அக்டோபரில் ரூ.1.52 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
புது டெல்லி:
இந்தியாவில் அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.52 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூலானது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 16.6 சதவீதம் அதிக வரி வசூல் பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் சாதனை அளவாக ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த செப்டம்பரில் ரூ.1.48 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.
தொடர்ந்து 8 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதில் 2 மாதங்கள் (ஏப்ரல், அக்டோபர்) ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது.
மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபரில் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.9,540 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.204 கோடியாகவும் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am