![image](https://imgs.nambikkai.com.my/sugar-cerlac.jpg)
செய்திகள் வணிகம்
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
புது டெல்லி:
குழந்தைகளுக்கு வழங்கப்படும் செரலாக் உணவில் கூடுதலாக சர்க்கரை இடுபொருள் சேர்க்கப்படும் புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தை இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சர்வதேச குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பு IPFAN இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் செரலாக் உணவுப் பொருளுடன் ஒப்பிடும்போது, இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் செரலாக் உணவில் கூடுதல் சர்க்கரை இடுபொருள்கள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த சர்ச்சை குறித்து வியாழக்கிழமை விளக்கமளித்த நெஸ்லே'இந்தியா நிறுவனம்,குழந்தைகள் உணவுப் பொருள்களில் எந்தவித சமரசமும் செய்துகொள்வதில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் வெவ்வேறு இடுபொருள்களின் அடிப்படையில், 30 சதவீதம் அளவுக்கு கூடுதல் சர்க்கரை அளவை நிறுவனம் குறைத்துள்ளது என்று தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2024, 3:57 pm
கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்
July 24, 2024, 1:31 pm
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது: ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்
July 14, 2024, 10:25 am
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
June 29, 2024, 6:02 pm
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
June 26, 2024, 2:32 am
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
June 23, 2024, 1:51 pm
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது
June 12, 2024, 10:35 am
சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்களை அகற்றியது Airbnb
June 7, 2024, 6:28 pm