செய்திகள் மலேசியா
கொரொனா நிலவரம்: ஒட்டுமொத்த மலேசியா 6849; சிலாங்கூர் 2558; கோலாலம்பூர் - கூட்டரசுப் பிரதேசம் 884
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 6,849 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நேற்றைய எண்ணிக்கையைவிட இது 1,178 பேருக்கு அதிகமாகத் தாக்கி இருக்கிறது.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,558 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையைக் காட்டிலும் 1,048 பேருக்கு அதிகமாக தொற்று பரவி இருப்பதைக் காட்டுகிறது.
இரண்டாம் இடத்தில் கோலாலம்பூர் கூட்டரசுப்பிரதேசம் உள்ளது. அங்கு மட்டும் 884 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சரவாக் 699 பேரும் நெகிரி செம்பிலானில் 685 பேரும் ஜொகூரில் 426 பேரும், சபாவில் 309 பேரும் கிளந்தானில் 248 பேரும் பினாங்கில் 205 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
