நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?

ஜொகூர் பாரு- 

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் நாளை சனிக்கிழமை ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது 

ஜொகூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 56 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 

சுமார் 2.7 மில்லியன் தகுதிப்பெற்ற வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்ளவுள்ளனர். 

வாக்களிப்பு நடவடிக்கை சீராக நடைபெற 1140 வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மொத்தமாக 2.7 மில்லியன் வாக்காளர்களில் 13 லட்சத்து 64 ஆயிரத்து 763 பேர் ஆண்கள் என்றும் 13 லட்சத்து 63ஆயிரத்து 163 பேர் பெண்கள் என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. 

ஜொகூர் மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதி நடந்தது.

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை இரவு 10 மணிக்குத் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset