செய்திகள் வணிகம்
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு
புது டெல்லி:
கடந்த ஆண்டு நிலவிய அதிக வெப்பம் காரணமாக வேளாண்மை, உற்பத்தி, சேவைகள் துறைகளில் இந்தியாவுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு சார்பில் பருவநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக வெப்பம் நிலவியதன் காரணமாக, பல்வேறு துறைகளில் பணியாளர்களின் வேலைத்திறன் பாதிக்கப்பட்டு சுமார் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிடிபி மதிப்பில் 5.4 சதவீதம் ஆகும்.
கடந்த 2016 முதல் 2021 வரை இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் காரணமாக 3.6 கோடி ஹெக்டேருக்கு மேலான பரப்பளவில் நடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், விவசாயிகளுக்கு சுமார் ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am