செய்திகள் மலேசியா
புதிய உச்சம்: மலேசியாவில் ஒரே நாளில் 150,309 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
கோலாலம்பூர்:
மலேசியாவில் நேற்று ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து இருநூறாயிரம் ஊசிகளைப் போடுவது என்ற இலக்கை எட்டிப் பிடிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நேற்றைய தினம் 151,309 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும், அவற்றுள் 105,722 முதல் தவணையாக போடப்பட்டன என்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார். 45,587 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
"ஜூன் 8ஆம் தேதி 150,309 ஊசிகள் போடப்பட்டுள்ளன. இனி இந்த எண்ணிக்கையை சீராக அதிகரித்து அன்றாடம் இருநூறாயிரம் ஊசிகளை எட்டிப்பிடிப்பதுதான் முக்கிய இலக்கு," என்றார் கைரி ஜமாலுதின்.
போதுமான அளவு தடுப்பூசிகள் வரத்தொடங்கியதும் நாட்டில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 150,000ஆக அதிகரிக்கப்படும் என்று கடந்த மாதம் அவர் தெரிவித்திருந்தார்.
"சுகாதார அமைச்சு மேலும் 12.4 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. எனவே ஒட்டுமொத்தத்தில் 44.8 மில்லியன் தடுப்பூசிகள் மலேசியா கைவசம் இருக்கும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசிகளைப் போட முடியும்," என்றார் அமைச்சர் கைரி.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
