
செய்திகள் மலேசியா
புதிய உச்சம்: மலேசியாவில் ஒரே நாளில் 150,309 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
கோலாலம்பூர்:
மலேசியாவில் நேற்று ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து இருநூறாயிரம் ஊசிகளைப் போடுவது என்ற இலக்கை எட்டிப் பிடிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நேற்றைய தினம் 151,309 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும், அவற்றுள் 105,722 முதல் தவணையாக போடப்பட்டன என்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார். 45,587 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
"ஜூன் 8ஆம் தேதி 150,309 ஊசிகள் போடப்பட்டுள்ளன. இனி இந்த எண்ணிக்கையை சீராக அதிகரித்து அன்றாடம் இருநூறாயிரம் ஊசிகளை எட்டிப்பிடிப்பதுதான் முக்கிய இலக்கு," என்றார் கைரி ஜமாலுதின்.
போதுமான அளவு தடுப்பூசிகள் வரத்தொடங்கியதும் நாட்டில் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 150,000ஆக அதிகரிக்கப்படும் என்று கடந்த மாதம் அவர் தெரிவித்திருந்தார்.
"சுகாதார அமைச்சு மேலும் 12.4 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. எனவே ஒட்டுமொத்தத்தில் 44.8 மில்லியன் தடுப்பூசிகள் மலேசியா கைவசம் இருக்கும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசிகளைப் போட முடியும்," என்றார் அமைச்சர் கைரி.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm