நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (ART) இன்னும் அமலுக்கு வரவில்லை என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நிதி அமைச்சருமான அவர் கூறுகையில், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு ஏற்ப, இந்த ஒப்பந்தம் ஒப்புதல் நடைமுறைகளை கடந்து செல்ல வேண்டியிருப்பதால், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றார். 

மேலும், இதுவரை அமெரிக்க தரப்பில் இருந்து சுங்க வரி தொடர்பான எந்தவித முன்மொழிவும் சமர்ப்பிக்கப்படாததால், ஒப்பந்தம் பரிசீலனை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளை குறைத்து, முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும். 

ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset