நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு

கோலாலம்பூர்: 

பள்ளி வளாகங்களில் அதிகபட்ச வேக வரம்பை 30 கிலோமீட்டராக நிர்ணயிக்க சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விதிகளில் திருத்தம் செய்ய போக்குவரத்து அமைச்சு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

மாணவர்கள், பள்ளி சமூகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் தேசிய கொள்கையாக, 2024 ஜூலை 15 அன்று அமைச்சரவையின் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் குழு இந்த முடிவை ஒப்புதல் அளித்தது.

இந்த திருத்தங்கள் பணிகள் அமைச்சு, பொதுப்பணித் துறை, உள்ளூராட்சி அமைச்சு, திட்டமிடல் துறை, கல்வி அமைச்சு, காவல்துறை, சாலை பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பல தரப்புகளுடன் இணைந்து விரிவாக பரிசீலிக்கப்படுகின்றன.

விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்ட பின், சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அமலாக்கம் ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கைகள், புதிய வேகக் குறியீட்டு பலகைகள், தெளிவான சாலை அடையாளங்கள், தானியங்கி கண்காணிப்பு கருவிகள், பள்ளி நேரங்களில் தொடர் கண்காணிப்பு மூலம் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் உயிரிழப்புகள் குறையும் என அரசு நம்புகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset