நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்

கோலாலம்பூர்: 

யயாசன் அகால்பூடி (Yayasan Akalbudi)  நிதி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையான விடுதலை கோரி, துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான அஹ்மத் ஜாஹித் ஹமிடி இன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஆஜரானார்.

73 வயதான அவர், காலை 8.55 மணியளவில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார். காலை 9 மணிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி நூருல்ஹுதா நுரைனி முஹமட் நோர் முன்னிலையில், அவரின் விடுதலை, தள்ளுபடி மனு தொடர்பான விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கில், அஹ்மத் ஜாஹித்தின் சார்பில் வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தே போக் தேய்க் தனது வாதங்களை முன்வைக்க உள்ளார்.

கடந்த ஜனவரி 8 அன்று, 47 குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என அறிவித்ததை அடிப்படையாக கொண்டு, ஜனவரி 28 அன்று அஹ்மத் ஜாஹித் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset