
செய்திகள் மலேசியா
மலேசிய கடற்படை மாலுமிகள் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு
புத்ராஜெயா:
மலேசிய கடற்படை மாலுமிகளை கொரோனா கிருமி தொற்றியுள்ளது. கடற்படைக்குச் சொந்தமான மஹாவாங்சா கப்பலில் இம்மாலுமிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் 98 மாலுமிகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று உறுதி செய்துள்ளார். அதேவேளையில் மாலுமிகளுக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் தற்போது சமூக அளவிலும் கிருமித் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொற்றுத் திரள்களுடன் சம்பந்தப்படாத அல்லது தொடர்பில்லாத தொற்றுகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்புது கவலை அளிப்பதாக சுகாதார அமைச்சு நேற்று கூறியிருந்தது.
இந் நிலையில் 98 மாலுமிகளுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
"ஒருவேளை அவர்கள் பணிக்குப் புறப்படும் முன்னர் தங்கள் வீட்டில் இருந்தபோது அல்லது கடைகளுக்குச் சென்று திரும்பியபோது தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு," என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப்.
இந் நிலையில் கப்பலுக்குச் சென்று சில தினங்கள் பணியாற்றிய பின்னர் மாலுமிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனினும் கப்பலுக்குச் செல்லும் முன்னர் அவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
"அப்போது மாலுமிகளிடம் தொற்று அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. தற்போது கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அம் மாலுமிகளுக்கு பத்து தினங்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்," என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm