செய்திகள் மலேசியா
ஷா ஆலமில் கோவிட் -19 தடுப்பூசி பிராண்டைத் தேர்வு செய்யக் கோரும் மூத்த குடிமக்கள்; தாமதமாகும் தடுப்பூசி போடும் பணி; தேதிகள் மாற்றியமைக்கப்பட்டாலும் தேர்வு செய்ய முடியாது: கைரி ஜமாலுதீன்
கோலாலம்பூர்:
சிலாங்கூர், ஷாஆலமில் அமைந்துள்ள செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் (Setia City Convention Centre) மூத்த குடிமக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடுவது கணிசமாக குறைந்துள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கோவிட் -19 தடுப்பூசியின் குறிப்பிட்ட (brand) பிராண்டை அவர்கள் தேர்வு செய்ய விரும்பியது இந்தக் குறைவான எண்ணிக்கைக்கு கரணம் என்று தெரிகிறது.
ஆங்கில தினசரியான தி ஸ்டார் இந்த நிலை குறித்து செய்தியை பதிவு செய்திருக்கிறது, தடுப்பூசி விநியோக மையத்தின் (பிபிவி) செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி, தங்களது தடுப்பூசி நேர வருகைகளைக் காட்டிய பலர் தடுப்பூசி போட மறுத்துவிட்டதாக அது பதிவு செய்துள்ளது. ஏனெனில், அவர்களுக்கு தற்போது போட இருக்கும் கோவிட் -19 தடுப்பூசியை அவர்கள் விரும்பவில்லை; தற்போதுள்ள பிராண்டுகளைத் தவிர்த்து இதர பிராண்டுகளையே மூத்த குடிமக்கள் விரும்புகிறார்கள்.
"அவர்களது நிலைப்பாட்டை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், ஏனென்றால் அவர்கள் முன்கூட்டியே கையெழுத்திட்டிருந்தார்கள். அவர்களுக்கு உரிய நேரமும் இடங்களும் ஒதுக்கப்பட்டன.
"இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில், இந்தக் கடினமான தொற்றுக் காலங்களில், மக்கள் முதலில் தங்கள் சொந்த ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்," என்று செய்தித் தொடர்பாளர் மேற்கோளிட்டு கூறினார்.
கோவிட் -19 தடுப்பூசிகளை மறுத்தவர்கள் மீண்டும் ஒரு முறை அழைக்கப்படுவார்கள், மேலும், அவர்களின் தடுப்பூசிக்கான நேரமும் புதிய தேதிகளும் வழங்கப்படும். செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், 'மூத்த குடிமக்களின் மறுதேதியிலும் அவர்களுக்கு விருப்பமான கோவிட் -19 தடுப்பூசி பிராண்ட் கிடைக்குமா என்று உத்தரவாதம் அளிக்க முடியாது' என்றும் தெரிவித்தார்.
"இந்த தொற்றுநோய்களின் போது, கிடைக்கக்கூடிய எந்தவொரு தடுப்பூசியும் சிறந்ததே என்பதை மக்கள் உணர வேண்டும், அவர்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவர்களால் எங்கும் பயணிக்க முடியாது" என்று செய்தித் தொடர்பாளர் மேற்கோளிட்டுள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசிக்கு ஏற்கனவே நியமனங்கள் உள்ளவர்களுக்கு மற்ற பிராண்டுகளின் விருப்பம் காரணமாக அவர்களின் தடுப்பூசிகளைப் பெறுவதை நிராகரிக்க வேண்டாம் என்று தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் அறிவுறுத்தியதாகவும் 'தி ஸ்டார்' தெரிவித்துள்ளது.
"நாங்கள் அவர்களின் வருகையை மறுபரிசீலனை செய்வோம், ஆனால், அவர்கள் இது குறித்து முடிவெடுக்க முடியாது, அதாவது, தடுப்பூசியை நீங்கள் தேர்வு செய்ய முடியாது என்று நாங்கள் அவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அமைச்சர் கோடி காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
