செய்திகள் மலேசியா
முதலாளிமார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது: குடிநுழைவுத் துறை விளக்கம்
கோலாலம்பூர்:
சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே குடிநுழைவுத் துறை நடவடிக்கை எடுப்பதாக எழுந்துள்ள புகாரை அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஸைமி தாவூத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். முதலாளிமார்கள் மீதும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 1,052 முதலாளிமார்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், குடிநுழைவு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இத்தகைய வழக்குகளின் மூலம் 19.3 மில்லியன் மலேசிய ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
"கடந்தாண்டு 519 முதலாளிமார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை அடங்கும். கடந்த மாதத்தில் மட்டும் 130 முதலாளிமார்களுக்கு 3.2 மில்லியன் மலேசிய ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்றார் கைருல்.
எனவே முதலாளிமார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும், சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவதும் அறவே உண்மையற்ற கூற்றுகள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 11:37 am
டீசல் மானியம் வேண்டி நாளை முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம்: டோ டிரக் உரிமையாளர்கள் அறிவிப்பு
April 11, 2026, 11:19 am
இரவோடு இரவாக வீடிழந்த 8 பேர்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
