செய்திகள் மலேசியா
மாமன்னருடன் சந்திப்பா?: இதுவரை இல்லை என பாரிசான் தலைவர்கள் மறுப்பு
கோலாலம்பூர்:
மாமன்னர் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தங்களுக்கு அது தொடர்பாக அரண்மனையில் இருந்து எந்தவோர் அழைப்பும் வரவில்லை என பாரிசான் கூட்டணியின் உறுப்புக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், ம.சீ.ச.வின் வீ கா சியோங், அம்னோ தலைவர் டத்தோ ஸாஹிட் ஹமிதி ஆகிய மூவரும் மாமன்னரிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்பதை இன்று உறுதி செய்துள்ளனர்.
இதேபோல் பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கெராக்கான் கட்சித் தலைவர் டொமினிக் லாவ் இந்தத் தகவல் வெறும் வதந்தியாக இருக்கலாம் என்றும் பிரதமர் மொஹைதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்துக்கு மேலும் அழுத்தம் தரவேண்டும் எனும் நோக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்களும் கட்சிகளும் சுயநலத்தை மட்டும் பாராமல் கொரோனா தொற்றை வெல்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு உதவவேண்டும் என்றும் டொமினிக் வலியுறுத்தி உள்ளார்.
இணைய ஊடகம் ஒன்று மாமன்னர் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் அமலில் உள்ள அவசரநிலை ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவுக்கு வருவது குறித்தும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது குறித்தும் மாமன்னருடனான சந்திப்பின்போது விவாதிக்கப்படலாம் என்றும் ஆரூடச் செய்தி வெளியானது.
இந்நிலையில் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கு இத்தகைய சந்திப்பு தொடர்பாக எந்தத் தகவலும் வரவில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
