
செய்திகள் மலேசியா
இன்று கண்டறியப்பட்ட 30 தொற்றுத் திரள்களில் 18 பணியிடங்களில்
கோலாலம்பூர்:
நாட்டில் தற்போது பணியிடங்களில்தான் அதிக அளவிலான கொரோனா தொற்றுத் திரள்கள் (clusters) உருவாவதாகக் கூறப்படுகிறது.
இன்று பதிவான 30 தொற்றுத் திரள்களில் 10 திரள்கள் தொழிற்சாலைகளில் உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
எனவே, பணியிடங்களில் அனைத்து SOPகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை முதலாளிமார்களும் நிர்வாகமும் உறுதிசெய்ய வேண்டுமென அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
"இன்று 30 தொற்றுத் திரள்கள் புதிதாக கண்டறியப்பட்டன. இவற்றுள் 18 தொற்றுத் திரள்கள் பணியிடங்களிலும் 10 திரள்கள் தொழிற்சாலைகளிலும் உருவாகி உள்ளன.
தேசிய பாதுகாப்பு மன்றம், அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சு ஆகியவை வகுத்துள்ள SOPகளைப் பின்பற்றுதல் அவசியம்," என்று நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
ஜொகூரில் 7 பணியிடத் தொற்றுத் திரள்கள் மூலம் 163 பேருக்கு நோய் தொற்றியது என்றும் சபாவில் 3 திரள்கள் மூலம் 53 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் 3 புதிய பணியிடத் தொற்றுத் திரள்கள், புத்ராஜெயாவில் 8 கெடா, கிளந்தானில் ஒன்று, பினாங்கில் 2 புதிய தொற்றுத்திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பணியிடத் தொற்றுகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என்று நூர் ஹிஷாம் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm