செய்திகள் மலேசியா
இன்று கண்டறியப்பட்ட 30 தொற்றுத் திரள்களில் 18 பணியிடங்களில்
கோலாலம்பூர்:
நாட்டில் தற்போது பணியிடங்களில்தான் அதிக அளவிலான கொரோனா தொற்றுத் திரள்கள் (clusters) உருவாவதாகக் கூறப்படுகிறது.
இன்று பதிவான 30 தொற்றுத் திரள்களில் 10 திரள்கள் தொழிற்சாலைகளில் உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
எனவே, பணியிடங்களில் அனைத்து SOPகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை முதலாளிமார்களும் நிர்வாகமும் உறுதிசெய்ய வேண்டுமென அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
"இன்று 30 தொற்றுத் திரள்கள் புதிதாக கண்டறியப்பட்டன. இவற்றுள் 18 தொற்றுத் திரள்கள் பணியிடங்களிலும் 10 திரள்கள் தொழிற்சாலைகளிலும் உருவாகி உள்ளன.
தேசிய பாதுகாப்பு மன்றம், அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சு ஆகியவை வகுத்துள்ள SOPகளைப் பின்பற்றுதல் அவசியம்," என்று நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
ஜொகூரில் 7 பணியிடத் தொற்றுத் திரள்கள் மூலம் 163 பேருக்கு நோய் தொற்றியது என்றும் சபாவில் 3 திரள்கள் மூலம் 53 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் 3 புதிய பணியிடத் தொற்றுத் திரள்கள், புத்ராஜெயாவில் 8 கெடா, கிளந்தானில் ஒன்று, பினாங்கில் 2 புதிய தொற்றுத்திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பணியிடத் தொற்றுகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என்று நூர் ஹிஷாம் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
