
செய்திகள் மலேசியா
இறப்புகளற்ற இங்கிலாந்து போல் மலேசியாவும் வர வேண்டும்; தடுப்பூசி போடுவதில் இங்கிலாந்து நமக்கு தூண்டுகோல்: டாக்டர் ஆதாம் பாபா
ஜோகூர்பாரு:
கோவிட் -19 தொற்றின் இறப்புகளில் இருந்து மலேசியா முற்றிலும் நீங்க வேண்டும் என்பதே நம் நோக்கம். இங்கிலாந்து (யுகே) தொற்றிலிருந்து நீங்கி வெற்றி அடைந்துள்ளது. அந்த நாட்டின் மீட்சியும் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் செயல்திறனும் மலேசிய அரசாங்கத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்று கூறி இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆதாம் பாபா.
அவர் மேலும் கூறுகையில், "இங்கிலாந்தின் வெற்றி மலேசிய அரசாங்கத்தை வைரஸுக்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கான தடுப்பூசி முயற்சிகளைத் தொடரவும் மேம்படுத்தவும் தூண்டியுள்ளது. இறப்புகளற்ற இங்கிலாந்து போல் மலேசியாவும் வர வேண்டும்.
"பெறப்பட்ட தரவுகளைப்பார்க்கும் போது இங்கிலாந்து தனது தடுப்பூசி திட்டத்தை முழுமையாக அமல்படுத்தியதால் தொற்றினால் மரணங்கள் இல்லை என்பதை பதிவு செய்திருக்கிறது.
"கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக கோவிட் -19 இலிருந்து இங்கிலாந்து பூஜ்ஜிய இறப்புகளைப் பதிவு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன; இதனால் கடந்த டிசம்பரிலிருந்து செயல்படுத்தப்பட்ட அதன் தடுப்பூசி திட்டத்தின் செயல்திறனை நிரூபிக்கிறது.
தடுப்பூசி பயிற்சியின் ஒரு கட்டமாக, சுமார் 500,000 முன்னணி வீரர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 9.3 மில்லியன் பேர் தடுப்பூசியை இரண்டாம் கட்டத்தில் பெறுவார்கள் என்றும், மூன்றாம் கட்டத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறுவார்கள் என்றும் டாக்டர் ஆதாம் கூறினார்.
"மெகா PPV, மொபைல் PPV, ஹெல்த் கிளினிக் PPV, பொது மருத்துவமனை PPV, மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நாடு முழுவதும் அதிகமான PPV வழங்குவதற்கான முயற்சியை அரசாங்கம் எடுத்து வருகிறது.
தடுப்பூசி பதிவு செய்யத் தவறியவர்களுக்கு மைசெஜ்தெரா விண்ணப்பத்தின் மூலம் அதை மீண்டும் செய்யலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். "மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெற இது முக்கியம், எனவே, கோவிட் -19 சங்கிலியை உடைக்க இதுதான் உகந்த வழி," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 10:24 pm
நானும் என் கணவரும் எங்கள் சொந்த சேமிப்பிலிருந்து ஹஜ்ஜுக்கு பணம் செலுத்தினோம்: நூ...
June 8, 2025, 10:16 pm
மலேசிய மாணவர்கள் ஹார்வர்டில் தங்கள் படிப்பை இடையூறு இல்லாமல் தொடரலாம்: உயர் கல்வி...
June 8, 2025, 10:14 pm
சிங்கப்பூர் ஸ்ரீ சிவன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி: டத...
June 8, 2025, 8:46 pm
சிவநேசன் கூறியது சரியான கூற்றாகும்; அரசாங்க அனுமதியுடன் நிறுவப்படும் ஆலயங்களுக்கு ...
June 8, 2025, 2:16 pm
ஐயா செ. சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி அறிமுக வ...
June 8, 2025, 2:05 pm
மோசடி கும்பல் எனது குரலையும், படத்தையும் போலியாகப் பயன்படுத்த செயற்கை நுண்ணறிவை பய...
June 8, 2025, 1:36 pm
நாட்டை விட்டு வெளியேற ஃபஹ்மி தடுக்கப்படவில்லை; ஆனால் போலிஸ் கண்காணிப்புப் பட்டியல...
June 8, 2025, 1:30 pm
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
June 8, 2025, 12:33 pm
காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்
June 8, 2025, 12:01 pm