செய்திகள் மலேசியா
இறப்புகளற்ற இங்கிலாந்து போல் மலேசியாவும் வர வேண்டும்; தடுப்பூசி போடுவதில் இங்கிலாந்து நமக்கு தூண்டுகோல்: டாக்டர் ஆதாம் பாபா
ஜோகூர்பாரு:
கோவிட் -19 தொற்றின் இறப்புகளில் இருந்து மலேசியா முற்றிலும் நீங்க வேண்டும் என்பதே நம் நோக்கம். இங்கிலாந்து (யுகே) தொற்றிலிருந்து நீங்கி வெற்றி அடைந்துள்ளது. அந்த நாட்டின் மீட்சியும் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் செயல்திறனும் மலேசிய அரசாங்கத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்று கூறி இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆதாம் பாபா.
அவர் மேலும் கூறுகையில், "இங்கிலாந்தின் வெற்றி மலேசிய அரசாங்கத்தை வைரஸுக்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கான தடுப்பூசி முயற்சிகளைத் தொடரவும் மேம்படுத்தவும் தூண்டியுள்ளது. இறப்புகளற்ற இங்கிலாந்து போல் மலேசியாவும் வர வேண்டும்.
"பெறப்பட்ட தரவுகளைப்பார்க்கும் போது இங்கிலாந்து தனது தடுப்பூசி திட்டத்தை முழுமையாக அமல்படுத்தியதால் தொற்றினால் மரணங்கள் இல்லை என்பதை பதிவு செய்திருக்கிறது.
"கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக கோவிட் -19 இலிருந்து இங்கிலாந்து பூஜ்ஜிய இறப்புகளைப் பதிவு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன; இதனால் கடந்த டிசம்பரிலிருந்து செயல்படுத்தப்பட்ட அதன் தடுப்பூசி திட்டத்தின் செயல்திறனை நிரூபிக்கிறது.
தடுப்பூசி பயிற்சியின் ஒரு கட்டமாக, சுமார் 500,000 முன்னணி வீரர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 9.3 மில்லியன் பேர் தடுப்பூசியை இரண்டாம் கட்டத்தில் பெறுவார்கள் என்றும், மூன்றாம் கட்டத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறுவார்கள் என்றும் டாக்டர் ஆதாம் கூறினார்.
"மெகா PPV, மொபைல் PPV, ஹெல்த் கிளினிக் PPV, பொது மருத்துவமனை PPV, மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நாடு முழுவதும் அதிகமான PPV வழங்குவதற்கான முயற்சியை அரசாங்கம் எடுத்து வருகிறது.
தடுப்பூசி பதிவு செய்யத் தவறியவர்களுக்கு மைசெஜ்தெரா விண்ணப்பத்தின் மூலம் அதை மீண்டும் செய்யலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். "மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெற இது முக்கியம், எனவே, கோவிட் -19 சங்கிலியை உடைக்க இதுதான் உகந்த வழி," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
