செய்திகள் மலேசியா
சபாவில் டெல்டா கொரோனா வகை பரவியதா? : வெறும் வதந்தி என்கிறது மாநில அரசு
கூச்சிங்:
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா திரிபு சபாவில் பரவி இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது எனத் தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் அதிகம் பரவிய இந்தத் தகவல் பொய்யானது என்று சபா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் கிறிஸ்டினா ருன்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என பெயர் வைத்துள்ளது. இந்நிலையில் சபா மாநில தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தாமான் வங்சா என்ற இடத்தில் டெல்டா திரிபு காணப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தற்போது அந்தப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட MCO அமலில் உள்ளது.
மலேசியாவில் டெல்டா திரிபு பாதிப்பு இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. எனினும் சபாவையும் இந்தத் திரிபையும் தொடர்புபடுத்தி இப்போது வெளியாகி உள்ள தகவலை நம்பவேண்டாம் என டாக்டர் கிறிஸ்டினா ருன்டி கேட்டுக் கொண்டார். அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள மே 26ஆம் தேதி முதல் சபா மாநில அரசு தடை விதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
