செய்திகள் மலேசியா
சபாவில் டெல்டா கொரோனா வகை பரவியதா? : வெறும் வதந்தி என்கிறது மாநில அரசு
கூச்சிங்:
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா திரிபு சபாவில் பரவி இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது எனத் தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் அதிகம் பரவிய இந்தத் தகவல் பொய்யானது என்று சபா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் கிறிஸ்டினா ருன்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என பெயர் வைத்துள்ளது. இந்நிலையில் சபா மாநில தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தாமான் வங்சா என்ற இடத்தில் டெல்டா திரிபு காணப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தற்போது அந்தப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட MCO அமலில் உள்ளது.
மலேசியாவில் டெல்டா திரிபு பாதிப்பு இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. எனினும் சபாவையும் இந்தத் திரிபையும் தொடர்புபடுத்தி இப்போது வெளியாகி உள்ள தகவலை நம்பவேண்டாம் என டாக்டர் கிறிஸ்டினா ருன்டி கேட்டுக் கொண்டார். அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள மே 26ஆம் தேதி முதல் சபா மாநில அரசு தடை விதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
