செய்திகள் மலேசியா
இரு மாதங்களில் 16 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வரும்: பிரதமர் தகவல்
புத்ராஜெயா:
அடுத்த இரு மாதங்களில் மலேசியாவுக்கு 16 மில்லியன் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளைத் தருவிப்பது அதிகரித்துள்ளதால் தினந்தோறும் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கு எட்டப்படும் என்றும் பின்னர் அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார் என அஸ்ட்ரோ அவானி கூறியுள்ளது.
எனினும் என்னென்ன தடுப்பூசிகள் இதில் அடங்கும் என்பதை பிரதமர் குறிப்பிடவில்லை. தடுப்பூசி போடும் திட்டம் இந்த அளவு வெற்றி பெற அரசாங்கத்தின் திட்டமிடலும் முன்களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தியாகமும்தான் முக்கியக் காரணம் என்றார் பிரதமர்.
தடுப்பூசி போடும் திட்டத்திற்காகப் பாடுபடும் மருத்துவர்கள், தாதியர், தடுப்பூசி செலுத்துவோர் உள்ளிட்ட அனைவரது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், மலேசிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்படும் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதை இவர்கள் அனைவரும் உறுதி செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி திட்டம் சுமூகமாக செயல்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்குவதாக குறிப்பிட்ட அவர், சில பலவீனங்கள் இருப்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாகவும் அவற்றைக் களைந்து இத் திட்டம் அடுத்தடுத்து முன்னேற்றம் காணும் என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
