
செய்திகள் மலேசியா
புதிய உச்சம்: ஒரே நாளில் லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
கோலாலம்பூர்:
மலேசியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது இந்த நடவடிக்கையில் புதிய உச்சம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தாண்டு இறுதிக்குள் மலேசியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. அதற்கு ஏதுவாக அன்றாடம் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசுத்தரப்பு மேற்கொண்டுள்ளது.
இந் நிலையில் நேற்று 117,563 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது கடந்த நூறு நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
இதன்மூலம் தடுப்பூசி போடும் திட்டம் வேகமெடுத்துள்ளதாகவும் மிக விரைவில் அன்றாடம் 150,000 தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் எனும் இலக்கை எட்டிப் பிடிக்க முடியும் என அரசுத்தரப்பு நம்புவதாகவும் தெரிகிறது.
மேலும், அதிக அளவில் தடுப்பூசி மையங்களை அமைப்பது, ஆயிரம் தனியார் கிளினிக்குகளை இதில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசு நிர்ணயித்துள்ள இலக்கு எட்டப்படும் என்று நம்புவதாக தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கும் விரைவில் சாத்தியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
மலேசியாவில் தடுப்பூசி போடும் விகிதமானது இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைவிட மலேசியாவில் அதிகமாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm