
செய்திகள் மலேசியா
மரண எண்ணிக்கை 26 ஆயிரத்தை எட்டிப்பிடிப்பது சாத்தியமாகாத ஒன்றல்ல: ஆதம் பாபா கவலை
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொவிட் தொற்று மரணங்கள் 26 ஆயிரத்தை எட்டிப்பிடிப்பது சாத்தியமாகாத ஒன்றல்ல என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் அண்மைய ஆய்வுப்படி, மலேசியாவில் கொவிட்-19 நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் 26 ஆயிரத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்பு சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான் என்று ஆதம் பாபா கூறியுள்ளார்.
"நாட்டில் இதுவரை பதிவாகி உள்ள காரணம் கண்டறிய முடியாத தொற்றுச் சம்பவங்களில் சுமார் 60 விழுக்காடு மக்கள் நடமாட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. 40 விழுக்காடு தொற்றுத் திரள்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன.
"கொரோனா கிருமி மக்களைப் பின்தொடர்கிறது. மக்கள் நகரும்போது கிருமியும் நகர்கிறது.
பல்வேறு துறைகள் சார்ந்த நடவடிக்கைகள், ரமலான் மாத நடவடிக்கைகள் மற்றும் 'கூரியர்' (விரைவு தபால்) சேவையில் ஈடுபட்டுள்ள குழுக்கள் ஆகியவைதான் சமூக அளவிலான தொற்றுத்திரள்கள் ஏற்பட சில முக்கிய காரணிகள்," என்றார் ஆதம் பாபா.
14 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள முழு முடக்க நிலை நல்ல பலன் தருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் மாநில அரசாங்கங்கள் நடத்தும் தொற்றுப் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது என்றார்.
"எனினும் முழு முடக்க நிலையின்போது, பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி அரசாங்கத்தின் கிருமித்தொற்றுப் பரவல் நடவடிக்கை வெற்றி பெறாது. தேசிய சுகாதார கட்டமைப்பின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதை குறைக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் தங்கள் பங்களிப்பை அளிக்கும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற இயலும்," என்றார் அமைச்சர் ஆதம் பாபா.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm