
செய்திகள் மலேசியா
ICUவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழக்கக் கூடிய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்தாண்டு வெகுவாக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே போல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் அதே வயது வரம்பிலான குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
"குழந்தைகளின் இறப்பு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து நிறைய கேள்விகளை எதிர்கொண்டுள்ளோம்.
"கடந்த ஆண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மூன்று பேர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு மே வரையிலான முதல் ஐந்து மாதங்களிலேயே அதே அளவிலான மரணச்சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
"மேலும், கடந்த ஆண்டு எட்டு குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 27 குழந்தைகள் அப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வகுத்துள்ள அனைத்து SOPக்களையும் முறையாகப் பின்பற்றி குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கித் தர வேண்டியது பெற்றோரின் கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், வீட்டில் உள்ள பெரியவர்கள் இயன்ற விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 9:03 pm
பேராக் செலாமா தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைப்பு பணிக்கு கல்வியமைச்சு 4 இலட்சம் ரிங்கிட...
June 2, 2025, 5:08 pm
8 சட்ட கேள்விகளைப் பரிந்துரைக்கக் கோரிய டத்தோஶ்ரீ அன்வாரின் விண்ணப்பம் நாளை விசாரி...
June 2, 2025, 5:07 pm
சட்டவிரோத வழியைப் பயன்படுத்தி ஹஜ் யாத்திரை செய்ய முயன்ற இந்தோனேசிய யாத்ரீகர் பாலைவ...
June 2, 2025, 5:06 pm
நெடுஞ்சாலை கட்டுமான நிதியிலிருந்து 20 மில்லியன் ரிங்கிட் சூதாட்டத்திற்கு பயன்படுத்...
June 2, 2025, 5:05 pm
தலைவர்களின் ஒவ்வொரு செயலும் நல்லிணக்கம், சமரசம், மக்கள் மீதான பொறுப்புணர்வு ஆகிய க...
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm
கட்சிகளுக்குள் பிளவுகள், முகாம்களை கொண்டிருக்கும் தலைவர்களை மாமன்னர் எச்சரித்தார்
June 2, 2025, 1:11 pm
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அதிகாரப்பூர்வ பிறந...
June 2, 2025, 12:49 pm
ஒற்றுமை என்பது வெறுமனே படிநிலைகள் அல்ல; அது நாட்டின் அடிப்படை தேவை- பிரதமர் டத்தோஶ...
June 2, 2025, 12:45 pm