
செய்திகள் மலேசியா
ICUவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழக்கக் கூடிய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்தாண்டு வெகுவாக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே போல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் அதே வயது வரம்பிலான குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
"குழந்தைகளின் இறப்பு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து நிறைய கேள்விகளை எதிர்கொண்டுள்ளோம்.
"கடந்த ஆண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மூன்று பேர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு மே வரையிலான முதல் ஐந்து மாதங்களிலேயே அதே அளவிலான மரணச்சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
"மேலும், கடந்த ஆண்டு எட்டு குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 27 குழந்தைகள் அப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வகுத்துள்ள அனைத்து SOPக்களையும் முறையாகப் பின்பற்றி குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கித் தர வேண்டியது பெற்றோரின் கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், வீட்டில் உள்ள பெரியவர்கள் இயன்ற விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 4:11 pm
ஹஜ் யாத்திரை மோசடி: விசாரணைக்கு உதவ 67 வயது ஆடவருக்கு தடுப்புக் காவல்
June 16, 2025, 3:54 pm
மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொருள் நகர்த்தல் மேலாண்மை அறிமுக விழா: ...
June 16, 2025, 3:32 pm
வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற டான்ஸ்ரீ மொஹைதினுக்கு நீதிமன்றம் அனுமதி
June 16, 2025, 2:55 pm
ரபிசிக்கு வாழ்த்துகள்; தகுதியானவர் பொருளாதார அமைச்சு பொறுப்பேற்பார்: பிரதமர்
June 16, 2025, 2:35 pm
கேமரன்மலையில் பயணிகள் கூட்டத்தை மோதிய கார்
June 16, 2025, 1:00 pm
வணக்கம் மடானி திட்டத்தின் கீழ் இந்திய வணிகர்களை மேம்படுத்தும் திட்டங்கள் தொடரும்: ...
June 16, 2025, 12:30 pm
வேலை வாய்ப்பு கண்காட்சிகளை இளைஞர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: சிவக்குமார்
June 16, 2025, 12:11 pm
கொதிக்கும் பாலைவனத்தில் பல சோதனைகளை சந்தித்தோம்: ஹஜ் முகவர்களால் ஏமாற்றப்பட்ட யாத்...
June 16, 2025, 12:02 pm
வணிகர்கள் GSTயை செலுத்தாமல் போவதால் SST விரிவாக்கம் செய்யப்படுகிறது: நிதியமைச்சு
June 16, 2025, 11:35 am