செய்திகள் உலகம்
இலங்கை வந்தடைந்த கப்பல் குறித்து சீனா விளக்கம்
கொழும்பு:
சீன உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
இலங்கை எம்.பி.க்கள் சிலரும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் சீன உளவுக் கப்பலை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தக் கப்பலின் இலங்கை பயணம், எந்நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் உளவுக் கப்பல் வருகைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியிருந்தது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து சீன உளவுக் கப்பலின் வருகைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இலங்கை தெரிவித்தது.
அதன்படி, சீன உளவுக் கப்பலானது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் வந்தடைந்தது. அக்கப்பல் வரும் 22ஆம் தேதி வரை அங்கு நிலைநிறுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சீன கப்பல் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச விதிகளுக்கு உள்பட்டே யுவான் வாங் கப்பல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்நடவடிக்கைகள் எந்த நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் பாதிக்காது.
எனவே, அக் கப்பலின் பயணத்தை எந்தவொரு மூன்றாவது நாடும் தடுக்க முயற்சிக்கக் கூடாது' என்றார்.
தொடர்புடைய செய்திகள்
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
