செய்திகள் உலகம்
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
சிங்கப்பூர்:
முன்னாள் வழக்கறிஞர் M ரவியுடன் போதைப்பொருள்களை உட்கொண்டதாகக் கூறப்படும் நபரை மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திரு ரவி இறப்பதற்குச் சில மணி நேரம் முன்னர் இருவரும் சேர்ந்து போதைப்பொருள்களை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை 5.40 மணிக்கு நினைவின்றிக் கிடந்த ரவியைப் பற்றி சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் அங்கு சென்றபோது ரவி நினைவின்றிக் கிடந்தார். அவருடன் மற்றொரு நபரும் இருந்தார்.
அவரை "A" என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
"A" ரவியுடன் சில மணி நேரத்துக்கு முன் போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறினார்.
திடீரென்று வழக்கறிஞர் ரவி மயக்கமடைந்ததாகவும் அவருக்குத் தாம் அவசர உதவி சிகிச்சை அளித்ததாகவும் "A" கூறினார்.
"A" பின்னர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைத்திருக்கிறார்.
போதைப்பொருள் தம்முடையது என்றும் அவர் சொன்னார்.
ரவி காலை 6.50 மணியளவில் டான் டொக் செங் மருத்துவமனையில் மாண்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:31 pm
எல்லைச் சுவருக்காக மக்களின் வீடுகள் பறிப்பு: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
