செய்திகள் உலகம்
சிங்கப்பூர் செயிண்ட் ஜோசஃப் தேவாலயத்தில் சந்தேகப் பொருள்: பொதுமக்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை
சிங்கப்பூர்:
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் (Upper Bukit Timah Road) உள்ள செயிண்ட் ஜோசஃப் தேவாலயத்தில் (St Joseph's Church) சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் ரசாயன, உயிரியல், கதிரியல், வெடிமருந்துத் தற்காப்புக் குழுமம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் காவல்துறை நடவடிக்கைகளுக்குக் குழுவினர் உதவிவருவதாக காவல்துறை சொன்னது.
தேவாலயத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகக் காவல்துறை அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.
காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
பொதுமக்கள் அந்த இடத்தைத் தவிர்க்கும்படியும் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு இணங்கி நடக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
முன்னதாக இன்று காலை 7.10 மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியிருந்தது.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 22, 2026, 10:24 am
