செய்திகள் உலகம்
இலங்கை வந்தது சீன உளவு கப்பல்: இந்தியா வழங்கியது இலவச ரோந்து விமானம்
கொழும்பு:
சீனாவின் உளவு கப்பல் இலங்கைக்கு வந்தடைவதற்குள், இலங்கைக்கு இந்தியா டார்னியர் ரோந்து விமானத்தை இலவசமாக வழங்கியது.
நவீன உளவு வசதிகளைக் கொண்ட "யுவான் வாங்5' கப்பலின் இலங்கை பயணத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அதையடுத்து, அக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரியிருந்தது.
கப்பலின் வருகைக்கு அனுமதி பெறுவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் சீனத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்தக் கப்பல் செவ்வாய்க்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை அங்கு அக்கப்பல் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், கொழும்பு காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோர்மடே, டோர்னியர் விமானத்தை அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தார். கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் டோர்னியர் 228 ரக விமானத்தை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 5:34 pm
எல்லைகளைக் கடந்த மனிதாபிமானம்: ஓமன் வெள்ளத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் வீரர்
March 27, 2026, 3:18 pm
ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாய்லாந்து சரக்குக் கப்பலான மயூரி நாரி தாக்கப்பட்டது
March 27, 2026, 11:07 am
சுங்கச்சாவடி அமைப்பு மூலம் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துகிறது ஈரான்
March 27, 2026, 10:38 am
“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்
March 27, 2026, 10:32 am
மேற்காசிய மோதல்: ஈரான் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்கள் ஒத்திவைக்கிறார் டிரம்ப்
March 26, 2026, 5:33 pm
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
March 26, 2026, 4:30 pm
சிங்கப்பூர் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு முக அடையாள முறை அறிமுகம்
March 26, 2026, 4:27 pm
ஜப்பான் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: மதிய உணவால் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
March 26, 2026, 4:22 pm
