செய்திகள் உலகம்
இந்தியாவின் எதிர்ப்பை புறந்தள்ளியது இலங்கை: சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி
கொழும்பு:
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அந்தக் கப்பல் வரும் 16ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளது.
சுமார் ஒரு வாரத்துக்கு அக்கப்பல் துறைமுகத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவீன வேவுபார்க்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட சீனாவின் "யுவான் வாங்5' உளவுக் கப்பலானது இலங்கைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அக் கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்தியாவின் தொடர் அழுத்தத்தை அடுத்து, கப்பலின் வருகையைக் காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில் இந்தியா தேவையின்றி இலங்கைக்கு அழுத்தம் தருவதாக சீனா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், "யுவான் வாங் 5' உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆகஸ்ட் 16ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் அக் கப்பல் 22ஆம் தேதி வரை அத் துறைமுகத்தில் கப்பல் நிலைநிறுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் தேதியே சீனாவில் இருந்து புறப்பட்ட கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 கடல்மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் விவரங்கள், கடற்படைத் தளங்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றைறக்கூட "யுவான் வாங்5' கப்பலால் சேகரிக்க முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
