நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று 126 பேர் கொரொனா தொற்று நோயாளிகள் உயிரிழப்பு

புத்ராஜெயா:

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மிக அதிக அளவிலான கொரொனா நோயாளிகள் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் இறப்புவிகிதம் அதிகரித்து வந்தாலும் அது நூறைத் தொட்டதில்லை. 

நேற்று 800 க்கும் அதிகமான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இன்று 7703 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இறப்புகளின் எண்ணிக்கை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒரே நாளில் 126 பேர் நாடு முழுவதும் இந்தத் தொற்றுக்கு இலக்காகி காலமாகி இருக்கிறார்கள்.

இவ்வாறு மலேசிய சுகாதாரத் துறை இயக்குனர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset