
செய்திகள் மலேசியா
இன்று ஐ.சி.யூ வில் உள்ளவர்கள் 872 பேர்; இறப்பு 71: நூர் ஹிஷாம் அப்துல்லாஹ்
புத்ராஜெயா:
"தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) சிகிச்சை பெறும் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 872 ஐ எட்டியுள்ளது. இன்றைய எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம்" என்று சுகாதாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) நிலவரப்படி, கோவிட் -19 நோயாளிகள் 419 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
''முந்தைய புள்ளிவிவரப்படி மே 7ஆம் நாள்தான் அதிகமான கோவிட் -19 நோயாளிகள் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அன்று 506 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்."
இன்றைய இறப்பு கணக்கை கூறிய டாக்டர் நூர் ஹிஷாம் கடந்த 24 மணி நேரத்தில் 71 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறினார். இதனுடன் நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,867 ஆகும்.
சிலாங்கூரில் 28 பேரும், ஜோகூர், சரவாக் (ஏழு), கோலாலம்பூர் (ஆறு), கிளந்தான் (ஐந்து), மலாக்கா (நான்கு), கெடா (மூன்று) நெகிரி செம்பிலன், திரெங்கானுவில் இரண்டு பேரும் இறந்து இருக்கிறார்கள். சபா, பஹாங், லாபான் மற்றும் பினாங்கு மாநிலங்களில் தலா ஒருவர் இறந்துள்ளார்கள்.
இன்றைய 7,105 தொற்றுகளில் இரண்டு பேர் மட்டும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள அனைவரும் மலேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான தொற்றுத் திரள்களை (157) பதிவுசெய்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில், கோலாலம்பூர் 78, சரவாக் 64 கிளந்தான் 66, ஜொகூர் 88.
நாடு முழுவதும் இதுவரை 496,121 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm