செய்திகள் மலேசியா
40 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித்திட்டத் தொகுப்பு: அறிவித்தார் பிரதமர்
புத்ராஜெயா:
நாட்டில் MCO3.0 நடமாட்டக் கட்டப்பாட்டு ஆணை நாளை அமலுக்கு வரும் நிலையில் 40 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித்திட்டத் தொகுப்பு ஒன்றை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று அறிவித்துள்ளார்.
இந்த நிவாரண உதவித் தொகுப்பின் மூலம் நாட்டு மக்களுக்கும் வர்த்தக துறைக்கும் உதவ அரசாங்கம் முன்வந்துள்ளதாக இன்று தொலைக்காட்சி வழி நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது பிரதமர் குறிப்பிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூலம் முழு முடக்கநிலை தற்போது நிலவுவதால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய B40 பிரிவினர் தங்களுடைய வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவது மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
மேலும் Moratorium பெற உரிய தகுதி உடையவர்கள் தங்களது கடன்களுக்கான தவணைத் தொகையை 50 விழுக்காடு வரை குறைத்து தொகையைச் செலுத்தலாம் என்றும் இத்தகைய சலுகை 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கான கூடுதல் பிரிஹாப்பின் உதவித் தொகையை வழங்க அரசாங்கம் முன்வந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், இதற்காக 120 கோடி ரிங்கிட் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பத்தின் வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித் தொகையைப் பெறக்கூடிய தகுதி உடையவர்கள் குறைந்தபட்சம் 100ரிங்கிட்டில் இருந்து அதிகபட்சமாக 500 ரிங்கிட் வரை பெறமுடியும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்த உதவித் தொகையானது ஜூன் மாத இறுதிக்குள் தகுதியானவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், டெக்ஸி ஓட்டுநர்களுக்கான கடன் தவணைச் சலுகையானது 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றார்.
மேலும் டெக்ஸி, பேருந்து, E-hailing ஓட்டுநர்கள் 500 ரிங்கிட் உதவித் தொகையை ஒரு தவணை மட்டும் பெறுவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இவையனைத்தும் pemerkasa உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
