செய்திகள் மலேசியா
மே 27, மே 28: LRT, MRT ரயில்களில் பயணம் செய்தவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது
கோலாலம்பூர்:
கடந்த வியாழன் (மே 27), வெள்ளி (மே 28) ஆகிய இரு தினங்களிலும் எல்.ஆர்.டி. மற்றும் எம்.ஆர்.டி. ரயில்களில் அதிக கூட்டம் இருக்கும் காலை வேளையில் பயணம் செய்த அனைவரும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளுமாறு Prasarana அறிவுறுத்தி உள்ளது.
அவ்விரு ரயில் சேவைகளைப் பயன்படுத்திய இருவர் தங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தாமாக முன்வந்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்த இரு பயணிகளும் மே 27, 28 தேதிகளில் தாங்கள் எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி. ரயில்களில் பயணம் மேற்கொண்ட பிறகு தங்களுக்கு கொவிட் 19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இருவரில் ஒருவரான கிளாடியா Claudia கடந்த 21ஆம் தேதிதான் முதல் தவணையாக ஃபைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாகவும் தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியையும் தாம் உணரவில்லை என்றும் கூறியுள்ளார்.
மற்றொரு பயணியான Nurul Aishyah தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் 27ஆம் தேதியன்று எல்.ஆர்.டி. ரயிலில் தாமன் மெலாத்தியில் இருந்து கே.எல்.சி.சி. வரை பயணம் செய்ததாகவும், தன்னைப் போலவே பயணம் மேற்கொண்ட சக பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மே 27ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இவர் ரயில் பயணம் மேற்கொண்டதாக Prasarana தெரிவித்துள்ளது. அதேபோல் மே 28ஆம் தேதி காலை 7.30 முதல் 8.30 மணிக்குள் Claudia ரயிலில் பயணம் செய்ததாகவும் Prasarana மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
