
செய்திகள் இந்தியா
ஒவைஸி கட்சியின் 4 எம்எல்ஏக்கள் லாலு கட்சியில் இணைந்தனர்
பாட்னா :
பிகார் மாநிலத்தில், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) 4 எம்எல்ஏக்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்தனர்.
இதன் மூலம் மாநில சட்டப்பேரவையின் 243 உறுப்பினர்களில், 80 உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக ஆர்ஜேடி மாறியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி பிகாரில் ஆட்சிப்புரிந்து வருகிறது.
ஆர்ஜேடி கட்சியின் தலைவராக உள்ள தேஜஸ்வி யாதவ், மாநில சட்டப் பேரவையின் எதிர்கட்சி தலைவராக உள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைப்பெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் 5 உறுப்பினர்களில் 4 பேர் தங்களை தனிப்பிரிவு என அறிவித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.
இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் விஜய் குமார் சின்ஹாவிடம் வழங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm
ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்கம் பறிமுதல்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 10:47 am
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am