செய்திகள் இந்தியா
ஒவைஸி கட்சியின் 4 எம்எல்ஏக்கள் லாலு கட்சியில் இணைந்தனர்
பாட்னா :
பிகார் மாநிலத்தில், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) 4 எம்எல்ஏக்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்தனர்.
இதன் மூலம் மாநில சட்டப்பேரவையின் 243 உறுப்பினர்களில், 80 உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக ஆர்ஜேடி மாறியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி பிகாரில் ஆட்சிப்புரிந்து வருகிறது.
ஆர்ஜேடி கட்சியின் தலைவராக உள்ள தேஜஸ்வி யாதவ், மாநில சட்டப் பேரவையின் எதிர்கட்சி தலைவராக உள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைப்பெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் 5 உறுப்பினர்களில் 4 பேர் தங்களை தனிப்பிரிவு என அறிவித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.
இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் விஜய் குமார் சின்ஹாவிடம் வழங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
