
செய்திகள் இந்தியா
ஒவைஸி கட்சியின் 4 எம்எல்ஏக்கள் லாலு கட்சியில் இணைந்தனர்
பாட்னா :
பிகார் மாநிலத்தில், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) 4 எம்எல்ஏக்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்தனர்.
இதன் மூலம் மாநில சட்டப்பேரவையின் 243 உறுப்பினர்களில், 80 உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக ஆர்ஜேடி மாறியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி பிகாரில் ஆட்சிப்புரிந்து வருகிறது.
ஆர்ஜேடி கட்சியின் தலைவராக உள்ள தேஜஸ்வி யாதவ், மாநில சட்டப் பேரவையின் எதிர்கட்சி தலைவராக உள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைப்பெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் 5 உறுப்பினர்களில் 4 பேர் தங்களை தனிப்பிரிவு என அறிவித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.
இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் விஜய் குமார் சின்ஹாவிடம் வழங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm