செய்திகள் இந்தியா
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
நியூ டெல்லி:
மத்திய பிரதேசத்தின் இண்டோர் நகரில் கழிவுநீர் குழாய்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷ வாயுவை சுவாசித்ததால் இரு தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தனர்.
கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரத்தின் ஒரு பகுதி குழாய் சுத்தம் செய்யும் பணியின் போது தவறுதலாக கழிவுநீர் குழியில் விழுந்ததால் இந்தச் சம்பவம் ஏற்பட்டது என்று கூடுதல் துணை போலீஸ் ஆணையர் சுமித் கெர்கட்டா கூறினார்.
“அந்தக் குழாயை மீண்டும் எடுக்க பணியாளர் ஒருவர் குழிக்குள் இறங்கினார். இருப்பினும் அவர் விஷ வாயுவுக்கு உட்பட்டதால் மயங்கி விழுந்தார்.
“அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு பணியாளரும் அந்தக் கழிவுநீர் குழிக்குள் இறங்கியபோது மயங்கி விழுந்தார்.
“அந்த இருவரும் கழிவுநீர் குழியில் இருந்த விஷ வாயுவால் ஏற்பட்ட மூச்சுத்திணறலின் காரணமாக உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், துணை போலிஸ் ஆணையர் ஸ்ரீகிருஷ்ண லால்சந்தானி தெரிவித்ததாவது, உயிரிழந்தவர்கள் இண்டோர் நகராட்சி ஊழியர்களான கரண் யாதவ், அஜெய் டோடி ஆவர்.
அந்த இரு பணியாளர்களும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவுநீர் குழிக்குள் இறங்கியதாக சாட்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் நடந்த இரண்டு மணி நேரம் கழித்தும் போலிசார், மாநகராட்சி அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் அதிகாரிகள் வருவதற்கு முன் இரு பணியாளர்களையும் கழிவுநீர் குழியிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்தனர்.
இண்டோர் மாநகராட்சி தெரிவித்ததாவது, செப்டிக் தொட்டியைக் காலி செய்த பிறகு மாநகராட்சி வாகனத்திலிருந்து நீரை வடிகால் குழிக்குள் வெளியேற்றும் போது அந்த இரு பணியாளர்களும் உயிரிழந்ததாக வேறு ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 5:52 pm
ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்போருக்குப் புதிய விதிமுறைகள்: ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்
April 30, 2026, 5:33 pm
விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடூரம்: கணவர் கழிவறைக்குச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்
April 30, 2026, 10:54 am
பெங்களூருவில் சோகம்: மருத்துவமனைச் சுவர் சரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாகப் பலி
April 29, 2026, 5:46 pm
இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயில்: 47.6 டிகிரி செல்சியஸைத் தொட்ட வெப்பம்
April 29, 2026, 12:45 pm
வங்கிப் பணத்திற்காகத் தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த அண்ணன்: ஒடிசாவில் நிகழ்ந்த சோகம்
April 29, 2026, 12:30 pm
எரிபொருள் வரி விலக்கு இல்லாமல் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு முடங்கும் நிலையில் உள்ளது
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 3:48 pm
