செய்திகள் இந்தியா
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
டெஹ்ரான்:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் இந்திய சரக்கு கப்பல்களுக்கு ஈரான் தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் பகுதி உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்காசிய எண்ணெய் உற்பத்தி நாடுகளிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் இந்த நீரிணை வழியாகவே பயணம் செய்கின்றன.
சமீப காலமாக அப்பகுதியில் பாதுகாப்பு நிலைமை பதற்றமாக உள்ளதால், கடற்பாதை பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவைச் சேர்ந்த சில சரக்கு கப்பல்கள் தற்காலிகமாக பயணத்தை நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை இந்தியாவின் கடல் வர்த்தகத்திலும், எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, ஈரான் அதிகாரிகள் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கடல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு நல்லெண்ண அடிப்படையில சென்று வந்த ஈரான் கப்பலை அமெரிக்க வான் படை இந்தியப் பெருங்கடலில் தாக்கியதும் அதிலிருந்த 200 மாலுமிகள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள்
March 10, 2026, 5:11 pm
இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை: அரசிடம் விளக்கம் கோரிய எதிர்க்கட்சிகள்
March 10, 2026, 5:10 pm
திறந்த குழியில் விழுந்த இளைஞர் பலி: முக்கிய ஒப்பந்ததாரர் கைது
March 8, 2026, 1:04 pm
