
செய்திகள் மலேசியா
கிளந்தானில் நிலநடுக்கம் ஏற்படவில்லை: வானிலை ஆய்வு துறை விளக்கம்
கோத்தபாரு:
கிளந்தான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முகமைகள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஒரு இணையதளத்தில் நிலநடுக்கம் குறித்து செய்தி வெளியானதாக அத் துறையின் தலைமை இயக்குநர் பீலான் சைமன் கூறினார்.
கிளந்தான் மாநிலத்தில் உள்ள குவா மூசாங் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலானது.
"மலேசியாவில் எத்தகைய நிலநடுக்கமும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மே 26ஆம் தேதி இரவு 9.38 மணியளவில் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது.
"நிலநடுக்கம் அல்லது சுனாமி குறித்த சரியான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my தளத்தை அணுகலாம்," என்று அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm