செய்திகள் மலேசியா
வரும் சனிக்கிழமை முதல் ஜூன் 11ஆம் தேதி வரை சரவாக்கில் MCO
கூச்சிங்:
வரும் சனிக்கிழமை முதல் ஜூன் 11ஆம் தேதி வரை சரவாக் மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரும். இத்தகவலை அம்மாநிலத்தின் துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் உகாஹ் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மன்றம் அம்மாநிலத்தில் பின்பற்றப்பட வேண்டிய SOPகளை வெளியிடும் என்று அவர் கூறினார்.
நாட்டில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு சீராக அதிகரித்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் சரவாக்கிலும் தொற்றுப் பரவலை உடனடியாகக் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் கூறினார்.
"சில வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக அமையும். SOPக்கள் அனைத்தையும் தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவிக்கும்.
"அதன் இணையதளத்தில் SOPகள் வெளியிடப்படும். மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவானது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதலுடன் இந்த மாநிலம் தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தி உள்ளது," என்றார் டத்தோ அமர் டக்ளஸ்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
