செய்திகள் மலேசியா
வரும் சனிக்கிழமை முதல் ஜூன் 11ஆம் தேதி வரை சரவாக்கில் MCO
கூச்சிங்:
வரும் சனிக்கிழமை முதல் ஜூன் 11ஆம் தேதி வரை சரவாக் மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வரும். இத்தகவலை அம்மாநிலத்தின் துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் உகாஹ் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மன்றம் அம்மாநிலத்தில் பின்பற்றப்பட வேண்டிய SOPகளை வெளியிடும் என்று அவர் கூறினார்.
நாட்டில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு சீராக அதிகரித்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் சரவாக்கிலும் தொற்றுப் பரவலை உடனடியாகக் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் கூறினார்.
"சில வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக அமையும். SOPக்கள் அனைத்தையும் தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவிக்கும்.
"அதன் இணையதளத்தில் SOPகள் வெளியிடப்படும். மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவானது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதலுடன் இந்த மாநிலம் தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தி உள்ளது," என்றார் டத்தோ அமர் டக்ளஸ்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
