
செய்திகள் மலேசியா
தடுப்பூசி போட்டுக்கொள்ள வராத 10 ஆயிரம் பேர்: கெடாவில் இதுதான் நிலைமை
அலோர்ஸ்டார்:
கெடா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உரிய நேரத்தில் வரவில்லை என தெரியவந்துள்ளது.
மொத்தம் 10,827 தனி நபர்கள் தடுப்பூசிக்காக விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தடுப்பூசி மையத்துக்கு வரவில்லை என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெடாவில் இதுவரை 30,100 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் mysejahtera செயலி மூலமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
"பதிவு செய்தவர்களில் சுமார் 35 விழுக்காட்டினர் ஊசி போட்டுக்கொள்ள வரவில்லை. எனினும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கு அந்த ஊசிகள் செலுத்தப்பட்டன. ஊசி போடுவதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்று கெடா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் மொகமட் ஃபிக்ரி உஜாங் (Dr Mohd Fikri Ujang)தெரிவித்துள்ளார்.
"கவலை மற்றும் ஊசி போட்டுக் கொள்வதற்காக தயார்படுத்திக் கொள்ளாதது, உடல்நல பாதிப்பு, தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்டிருப்பது, வெளியூர் சென்றிருப்பது என்று பல்வேறு காரணங்களை ஊசி போட்டுக் கொள்ளாதவர்கள் முன்வைத்துள்ளனர்.
"மேலும் சிலர் ஊசி போட்டுக் கொள்வதற்கான தேதியை மாற்றும்படி கடைசி நேரத்தில் விண்ணப்பித்துள்ளனர். எனவே, ஊசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
"மேலும் தடுப்பூசிகளின் முக்கியத்துவம், அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்தும் விவரிக்கப்படுகிறது," என்று டாக்டர் மொகமட் ஃபிக்ரி உஜாங் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm