செய்திகள் மலேசியா
மலேசியா இன்று 7,478 புதிய கோவிட் -19 தொற்றுக்களை பதிவு செய்துள்ளது: நூர் ஹிஷாம் அப்துல்லாஹ்
கோலாலம்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் 7,478 கோவிட் -19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது.
இன்று மதியம் நிலவரப்படி 2,455 ஆக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் சிலங்கூரில் பதிவாகி உள்ளன என்று சுகாதார இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று மாலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் 760 தொற்றாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், சரவாக் 640 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கடந்த வாரம் அரை மில்லியன் பதிவுகளை நாடு எட்டியது. அதாவது, இதுவரை 533,367 பேர் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
ஜோகூர், பினாங்கு, கிளந்தான், கெடா போன்ற மாநிலங்களும் முறையே 587, 420, 547, 542 பேர் தொற்று இலக்காகி இருக்கின்றனர்.
டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு டஜன் புதிய திரள்களை கண்டறியப்பட்டன. எதிர் வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாக வெளிவரக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
470 தொற்றுகள், சம்பந்தப்பட்ட ஏழு மாநிலங்களில் நோன்புப்பெருநாள் வழி வந்த திரள்கள் என்பது குறிப்பிட்டு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நோன்புப் பெருநாளின் முதல் நாளில் முஸ்லிம்கள் தங்கள் உறவினர்களை சந்திப்பதை தடைசெய்து நாடு தழுவிய இயக்க கட்டுப்பாட்டு உத்தரவை பொது சுகாதார அதிகாரிகள் அமல்படுத்தினார்கள். இருப்பினும், இந்தத் திரள்கள் தோன்றி உள்ளன.
தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈகைத் திருநாளுக்கு சமூக மற்றும் குடும்ப வருகைகளை தடைசெய்தது. கோவிட் -19 நோய்த் தொற்றுகளின் புதிய அலைகளைத் தடுக்க நாடு முழுவதும் மூன்றாவது இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டது, இது நேற்றும் இன்றும் 7,000 பேரைத் தாண்டிச் சென்றுள்ளது.
ஹரி ராயா கிளஸ்டர்களின் தோற்றம், கோவிட் எதிர்ப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பலவீனமாக அமல்படுத்துவதாக பலமுறை குற்றம்சாட்டிய பொது உறுப்பினர்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, இது நோன்புப் பெருநாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் மக்கள் மாநில எல்லைகளை கடப்பது எவ்வளவு எளிது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
சிலாங்கூர், பஹாங், பினாங்கு, சரவாக் ஆகிய மாநிலங்கள் தலா ஒரு நோன்புப் பெருநாள் திரளுக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த அனைத்து திரள்களும் மே 19 முதல் மே 25 வரை பதிவானவை.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
