செய்திகள் மலேசியா
அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்துள்ளது: அமைச்சர் விளக்கம்
புத்ராஜெயா:
இரு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதி விபத்து நிகழ மனிதத் தவறுதான் காரணம் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு ரயில் மற்றொரு ரயில் மீது மோதி விபத்து நிகழ்ந்ததாக அவர் இன்று கூறினார்.
சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த ரயில் டாங் வாங்கி ரயில் நிலையம் நோக்கிச் சென்றிருக்க வேண்டும் என்றும் ஆனால் அவ்வாறு செல்லாமல் அது எதிர் திசையில் சென்று கே.எல்.சி.சி. நிலையத்தின் அருகே இருந்த ரயில் மீது மோதி விட்டதாகவும் அவர் விவரித்தார்.
இவை தொடக்க நிலை விசாரணைகளின்போது தெரியவந்த விவரங்கள் என்றும் குறிப்பிட்ட அவர், டி.ஆர்.40 எண் கொண்ட ரயிலை இயக்கிய ஓட்டுநரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.
தெற்கே செல்லவேண்டிய ரயிலை அவர் வடக்கு நோக்கி செலுத்தியதாகவும், அந்த ரயில் டாங் வாங்கி நோக்கிச் செல்வதாக மற்றொரு ரயிலான டி.ஆர்.81க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று நிகழ்ந்த விபத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதகாவும் அமைச்சர் தெரிவித்தார்.
காயமடைந்த 64 பேரில் 6 பேருடைய நிலைமை மோசமாக உள்ளது என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர், 43 பேர் வெளி நோயாளிகளுக்குரிய சிகிச்சையை பெற்றதாகக் கூறினார்.
மேலும், இந்த விபத்துக் குறித்து விசாரிக்க 9 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு அமைத்துள்ள இக்குழு விரிவான விசாரணை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் வீ கா சியோங் குறிப்பிட்டார்.
இந்த விசாரணைக் குழுவுக்கு போக்குவரத்து அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ இசாம் இசாக் Datuk Isham Ishak தலைமை ஏற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
