செய்திகள் மலேசியா
60 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி விருப்பத்தேர்வு பதிவு நாளை நண்பகலில் திறக்கப்படுகிறது: கைரி ஜமாலுத்தீன்
கோலாலம்பூர்:
60 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கான பதிவு, நாளை (மே 26) தொடங்கும் என்று கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (CIDF) இன்று அறிவித்துள்ளது.
அமைச்சர் கைரி ஜமாலுதீன் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, "தடுப்பூசிக்கான முன்பதிவை நாளை மதியம் 12 மணிக்கு செய்ய முடியும்" என்று கூறினார்.
'வயதானவர்களுக்கு தடுப்பூசிகளை போட முன்னுரிமை அளிக்கப்படும்' என்று அவர் வலியுறுத்தினார்.
“வயதானவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பதிவு செய்ய இன்னும் சில நாட்கள் அவகாசம் அளித்துள்ளோம்.
"இதனால், கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு, ஜொகூர் மற்றும் சரவாக் கூச்சிங் மற்றும் மிரி ஆகிய இடங்களில் அஸ்ட்ராஜெனெகா விருப்பத்தேர்வு செய்ய முடியும். இரண்டாம் கட்ட பதிவுக்காக நாளை 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்பதிவுகளை திறக்க சிஐடிஎஃப் முடிவு செய்துள்ளது," என்று அவர் கூறினார்.
"அஸ்ட்ராஜெனெகா விருப்பத் தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்திற்கு அனைத்து இடங்களும் விரைவாக நிரப்பப்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த ஏற்பாடு" என்றும் அமைச்சர் கைரி தெரிவித்தார்.
"60 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் பதிவு செய்ய இன்றும் நாளையும் நண்பகலுக்கு முன் திறப்போம். பின்னர் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு பதிவு செய்ய செயலியைத் திறப்போம்," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:40 pm
கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது
February 24, 2026, 5:39 pm
லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
February 24, 2026, 5:37 pm
உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை
February 24, 2026, 5:36 pm
சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை
February 24, 2026, 5:33 pm
அவசர பாதையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்தார்
February 24, 2026, 5:27 pm
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது
February 24, 2026, 4:53 pm
பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைதாகினர்
February 24, 2026, 4:31 pm
கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
