நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை

ரந்தாவ் பஞ்சாங்: 

கடந்த ஞாற்றுக்கிழமை கம்போங் தாசேக் அருகிலுள்ள காடுகளில் 1.1 டன் சர்க்கரையையும் பேக்கெட் எண்ணெயையும் வைத்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் ஒருவரை அதிகாரிகள் 10 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

 ப்ரோட்டான் வாஜா காரில் பயணம் செய்த அந்தச் சந்தேக நபர், மதியம் 1.02 மணியளவில் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று கண்டறியப்பட்டதாகக் கிளந்தான் மாநில உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவுத் துறையின் (KPDN) தலைமை அமலாக்க அதிகாரி அஸ்வாடி ஜாஃபார் தெரிவித்தார்.

"இந்த நடவடிக்கையை அறிந்த KPDN உறுப்பினர்களின் குழுவும், பெங்காலான் கூபோர் பிராந்திய மூன்று கடற்படையும் (PPM) உடனடியாக லூபோக் கோங்கிலிருந்து பாங்கோல் கூலிம் வரை காரைத் துரத்த நடவடிக்கை எடுத்தனர்," என்று கூறினார். பின்னர், கடத்துனர் காரை விட்டுவிட்டு பாங்கோல் குளிம் அருகிலுள்ள காடுகளில் ஓடினார்.

 காரில் RM8000 மதிப்புள்ள 510 கிலோகிராம் பேக்கெட் எண்ணெயும் 648 கிலோகிராம் சர்க்கரையும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு 1961 உற்பத்தி கட்டுப்பாட்டு சட்டம் பிரிவு 21 கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset