நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களைப் பாதுகாத்து ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று அதிகாரிகள் உட்பட 12 நபர்கள் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தேர்தல் ஆணையமும் சாலை போக்குவரத்து துறையும் (JPJ) இணைந்து இன்று கிள்ளான் பள்ளத்தாக்கு, நெகேரி செம்பிலான் பகுதிகளில் உள்ள வீடுகளையும் நிறுவனங்களையும் சோதனை செய்ததாக SPRM துணைத் தலைமை ஆணையர் (செயல்பாடுகள்), டத்தோஸ்ரீ அஹ்மத் குசைரி யஹாயா தெரிவித்துள்ளார்.

 2023 முதல் நடந்து வரும் ஊழல், மத்தியஸ்தர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகத்தின் பேரில் அப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“அந்த 12 சந்தேக நபர்களும் காலை 5.30 மணி முதல் 7 மணி வரை 'Op Middleman' என்ற திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

இதில் 9 சந்தேக நபர்கள் லஞ்சம் கொடுக்கும் முகவர்களாகவும் மத்தியஸ்தர்களாகவும் இருந்தவர்கள். அவர்களது லாரிகளைப் பாதுகாக்கவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் கோலாலம்பூர், சிலாங்கூர்  JPJ அதிகாரிகளுக்கு மாதம் RM100 முதல் RM4,500 வரை லஞ்சம் கொடுத்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.

 இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் 17(b) பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset