நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவசர பாதையில் மோட்டார் சைக்கிள்  மோதி ஒருவர் உயிரிழந்தார்

தங்காக்: 

வடற்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்குப்புறத்தின் 107.1-ஆவது கிலோமீட்டரில் உள்ள அவசரப் பாதையில், போக்குவரத்து அதிகாரியை மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளது.

"அவசர பாதையில் ஒரு நபரை சோதனை செய்து கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி மீது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று தங்காக் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ரோஸ்லான் முகமது தாலிப் தெரிவித்தார்.

"அந்தப் போலீஸ் அதிகாரி தங்காக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கப் பிரிவைச் சேர்ந்தவராவார்," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மலாக்கா, ஜாசின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சுசுகி DL650XA மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அந்த 38 வயது உள்ளூர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஜாசின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் மட்டுமே சம்பந்தப்பட்டது என்றும், இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (APJ) பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

சம்பவம் குறித்த தகவல் உள்ளவர்கள், விசாரணைக்கு உதவ, விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மத் ஜமில் அஸ்வா அமீர் அஸ்வாவை 019-305834 என்ற என்னுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset