நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் பலி

புத்ராஜெயா:

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 5 பேர் மரணமடைந்து உள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த மரண எண்ணிக்கை 35,607 ஆக உயர்வு கண்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 2 மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

பெர்லிஸ், பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

மரணமடைந்த ஐந்து பேரில் ஒருவர் மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னதாகவே மரணமடைந்து விட்டார்.

இம்மாதம் மட்டும் 60 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து உள்ளனர்.

கடந்த மாதம் 564 பேரும் மார்ச் மாதத்தில் 2,235 பேரும் மரணமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset