செய்திகள் மலேசியா
மனைவிக்கு விமான டிக்கெட் வாங்க கையூட்டு பெற்றதாக ஆயுதப்படையின் முன்னாள் பாதுகாப்பு புலனாய்வுத் துறை இயக்குநர் மீது குற்றம் சாட்டப்பட்டது
கோலாலம்பூர்:
மனைவிக்கு விமான டிக்கெட் வாங்க 20,000 அமெரிக்க டாலர், 64,000 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக முன்னாள் பாதுகாப்பு புலனாய்வுத் துறை இயக்குநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மலேசிய ஆயுதப்படை முன்னாள் பாதுகாப்பு புலனாய்வு இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமட் ரசாலி அலியாஸ் இக்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவிக்கு வெளிநாட்டு விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக 20,000 அமெரிக்க டாலர், 64,600 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
காலை 8.35 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த 60 வயதான முகமட் ரசாலி தாம் குற்றமற்றவர் என கூறினார்.
மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் நீதிபதி சுசானா ஹுசின் முன் வாசிக்கப்பட்ட பிறகு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
குற்றச்சாட்டுகள் எனக்குப் புரிகிறது. ஆனால் நான் குற்றமற்றவன்.
இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 1:16 pm
வெளிப்புற தலையீடு இல்லாமல் இராணுவப் படைகளின் உயர் பதவி நியமனங்கள் இருக்க வேண்டும்: காலித் நோர்டின்
January 29, 2026, 1:06 pm
இரவு முழுவதும் தேடிய 83 வயது மூதாட்டி உயிருடன் கண்டுபிடிப்பு
January 29, 2026, 11:51 am
உடல்நலக் குறைபாடு இருந்தபோதும் தைப்பூச மரபை உயிர்ப்பிக்கும் ஞானாபிரகாசம்
January 29, 2026, 10:53 am
பினாங்கில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 737 சொகுசு கார்கள் பறிமுதல்: சூல்கிப்லி
January 29, 2026, 10:51 am
முன்கூட்டியே ஓய்வு பெறும் ஆசிரியர்களின் முடிவு குறைந்து வருகிறது: ஃபட்லினா
January 29, 2026, 10:50 am
கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மறைந்திருந்தனர்
January 29, 2026, 10:15 am
