செய்திகள் மலேசியா
ரிங்கிட் வலுவடைவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் நாட்டின் மனித மூலதனத்தின் வலிமையையும் பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
ரிங்கிட் தொடர்ந்து வலுவடைவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும்
நாட்டின் மனித மூலதனத்தின் வலிமையையும் பிரதிபலிக்கிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
ரிங்கிட் நாணயத்தின் வலுவடைதல் என்பது நிதிச் சந்தை நகர்வுகளையோ அல்லது உலகப் பொருளாதாரத்தின் குறுகிய கால உணர்வுகளையோ மட்டும் பிரதிபலிக்கவில்லை.
மாறாக அது முதலீட்டாளர் நம்பிக்கையின் நிலை, தேசியக் கொள்கைகளின் ஸ்திரத்தன்மை, நிறுவனங்களின் வலிமை, நாட்டின் மனித மூலதனத்தின் திறன்களை பிரதிபலிக்கிறது.
தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்போது, பணியாளர் திறன்கள் மேம்படுத்தப்படும்போது, தேசிய நிர்வாகம் வெளிப்படையாகவும் நேர்மையுடனும் செயல்படுத்தப்படும்போது மட்டுமே ஒரு நாடு தனது நாணயத்தின் வலிமையைப் பராமரிக்க முடியும் என்பதை வரலாறும் பொருளாதார யதார்த்தமும் நிரூபிக்கின்றன.
எனவே, நாட்டின் பொருளாதார அடித்தளங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் தரமான பணியாளர்களை வளர்ப்பது முக்கிய உந்துதல்களில் ஒன்றாகும்.
அந்த சூழலில், மனிதவள அமைச்சு உயர் தாக்க திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் நாட்டின் மனித மூலதனத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 1:16 pm
வெளிப்புற தலையீடு இல்லாமல் இராணுவப் படைகளின் உயர் பதவி நியமனங்கள் இருக்க வேண்டும்: காலித் நோர்டின்
January 29, 2026, 1:06 pm
இரவு முழுவதும் தேடிய 83 வயது மூதாட்டி உயிருடன் கண்டுபிடிப்பு
January 29, 2026, 11:51 am
உடல்நலக் குறைபாடு இருந்தபோதும் தைப்பூச மரபை உயிர்ப்பிக்கும் ஞானாபிரகாசம்
January 29, 2026, 10:53 am
பினாங்கில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 737 சொகுசு கார்கள் பறிமுதல்: சூல்கிப்லி
January 29, 2026, 10:51 am
முன்கூட்டியே ஓய்வு பெறும் ஆசிரியர்களின் முடிவு குறைந்து வருகிறது: ஃபட்லினா
January 29, 2026, 10:50 am
கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மறைந்திருந்தனர்
January 29, 2026, 10:15 am
