
செய்திகள் மலேசியா
ஆபரேஷன் செலாமட்: 10 நாட்களில் 338,269 சம்மன்கள்
கோலாலம்பூர்:
பத்து நாள்கள் நீடித்த ஆபரேஷன் செலாமட் 18 நடவடிக்கையின்போது நாடு முழுவதும் உள்ள வாகனமோட்டிகளுக்கு 338,269 சம்மன்கள் அளிக்கப்பட்டன.
நோன்புப் பெருநாளையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஏராளமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 223,449 பேருக்கு சம்மன்கள் அளிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 51 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை மீறியதற்காக 240,421 பேருக்கும், போக்குவரத்து சிக்னலை பொருட்படுத்தாத 4,375 பேருக்கும், வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்திய 1,991 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த விபத்துகளின் எண்ணிக்கை இந்தாண்டு ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டு 15,836 வழக்குகள் பதிவான நிலையில், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 15,947 ஆக உள்ளது.
கொரோனா விவகாரம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருநாள் வேளையில் போக்குவரத்து மீறல்கள் அதிகம் பதிவாகவில்லை.
விபத்துச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் 65 விழுக்காட்டினர், அதாவது 108 பேர் இருசக்கர வாகனமோட்டிகள் ஆவர்.
விதிமீறல்களுக்காக 32,136 இருசக்கர வாகனமோட்டிகளுக்கு சம்மன் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am