செய்திகள் மலேசியா
ஆபரேஷன் செலாமட்: 10 நாட்களில் 338,269 சம்மன்கள்
கோலாலம்பூர்:
பத்து நாள்கள் நீடித்த ஆபரேஷன் செலாமட் 18 நடவடிக்கையின்போது நாடு முழுவதும் உள்ள வாகனமோட்டிகளுக்கு 338,269 சம்மன்கள் அளிக்கப்பட்டன.
நோன்புப் பெருநாளையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஏராளமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 223,449 பேருக்கு சம்மன்கள் அளிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 51 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை மீறியதற்காக 240,421 பேருக்கும், போக்குவரத்து சிக்னலை பொருட்படுத்தாத 4,375 பேருக்கும், வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்திய 1,991 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த விபத்துகளின் எண்ணிக்கை இந்தாண்டு ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டு 15,836 வழக்குகள் பதிவான நிலையில், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 15,947 ஆக உள்ளது.
கொரோனா விவகாரம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருநாள் வேளையில் போக்குவரத்து மீறல்கள் அதிகம் பதிவாகவில்லை.
விபத்துச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் 65 விழுக்காட்டினர், அதாவது 108 பேர் இருசக்கர வாகனமோட்டிகள் ஆவர்.
விதிமீறல்களுக்காக 32,136 இருசக்கர வாகனமோட்டிகளுக்கு சம்மன் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
November 23, 2025, 9:01 pm
கோலாலம்பூர் - ஜோகூர் மின்-ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்
November 23, 2025, 4:42 pm
முதன் முறையாக ஆயிரக்கணக்கானோர் திரண்ட S.I.R.A.T இளைஞர் உச்சி மாநாடு
November 23, 2025, 3:19 pm
மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்த டத்தோஸ்ரீ அன்வாரும் மோடியும் உறுதி கொண்டுள்ளனர்
November 23, 2025, 3:16 pm
பிரச்சினைகளை எதிர்கொண்டு சவால்களை சமாளித்தால் முன்னேற வாய்ப்பு உண்டு: குலசேகரன் வலியுறுத்து
November 23, 2025, 3:15 pm
சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த கடுமையான நடவடிக்கை அவசியம்: டத்தோ லோகபாலா
November 23, 2025, 3:14 pm
வரலாற்றுப்பூர்வ கிந்தா இந்தியர் சங்கத்திற்கு பேரா ராஜா மூடா வருகை அளித்தார்
November 23, 2025, 3:13 pm
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துங்கள்: கல்வி அமைச்சுக்கு பிபிபி கட்சி வேண்டுகோள்
November 23, 2025, 2:46 pm
தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சினையில் மலேசியா தலையிடாது: பிரதமர் அன்வார்
November 23, 2025, 1:13 pm
