செய்திகள் மலேசியா
ஆபரேஷன் செலாமட்: 10 நாட்களில் 338,269 சம்மன்கள்
கோலாலம்பூர்:
பத்து நாள்கள் நீடித்த ஆபரேஷன் செலாமட் 18 நடவடிக்கையின்போது நாடு முழுவதும் உள்ள வாகனமோட்டிகளுக்கு 338,269 சம்மன்கள் அளிக்கப்பட்டன.
நோன்புப் பெருநாளையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஏராளமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 223,449 பேருக்கு சம்மன்கள் அளிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 51 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை மீறியதற்காக 240,421 பேருக்கும், போக்குவரத்து சிக்னலை பொருட்படுத்தாத 4,375 பேருக்கும், வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்திய 1,991 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த விபத்துகளின் எண்ணிக்கை இந்தாண்டு ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டு 15,836 வழக்குகள் பதிவான நிலையில், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 15,947 ஆக உள்ளது.
கொரோனா விவகாரம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருநாள் வேளையில் போக்குவரத்து மீறல்கள் அதிகம் பதிவாகவில்லை.
விபத்துச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் 65 விழுக்காட்டினர், அதாவது 108 பேர் இருசக்கர வாகனமோட்டிகள் ஆவர்.
விதிமீறல்களுக்காக 32,136 இருசக்கர வாகனமோட்டிகளுக்கு சம்மன் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 4:51 pm
பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்
January 22, 2026, 12:59 pm
தொடக்கப்பள்ளியில் பகடிவதையா?: ஒன்றாம் ஆண்டு மாணவன் தாக்கப்பட வழக்கில் போலீஸ் விசாரணையை தொடங்கியது
January 22, 2026, 12:11 pm
பங்சார் தமிழ்ப்பள்ளிக்கு 100 மடிக்கணினிகள்; இந்திய சமுதாயத்திற்கு கல்வியே சிறந்த முதலீடு: ஃபஹ்மி
January 22, 2026, 12:09 pm
பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்: டான்ஸ்ரீ நடராஜா
January 22, 2026, 11:33 am
RM2.12 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் இராணுவத் தளபதி தாம் லஞ்சம் பெறவில்லை என்று வாதம்
January 22, 2026, 11:24 am
மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்: இருவர் கைது
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
