செய்திகள் மலேசியா
பங்சார் தமிழ்ப்பள்ளிக்கு 100 மடிக்கணினிகள்; இந்திய சமுதாயத்திற்கு கல்வியே சிறந்த முதலீடு: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்திற்கு கல்வியே மிகச் சிறந்த முதலீடு என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
தகவல் தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபஹ்மி ஃபட்சில் இன்று காலை பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு சிறப்பு வருகை தந்தார்.
பங்சார் தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் டத்தோ சங்குபிள்ளை அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
பங்சார் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் லீலாவதி உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு ஆரம்ப தொகையாக 150 வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்தார்.
அந்த வகையில் பங்சார் தமிழ்ப் பள்ளியில் பயிலும் 60 மாணவர்களுக்கு 8,850 வெள்ளி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், பங்சார் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை நூறாக உயர்த்தப்பட வேண்டும்.
குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளியாக பங்சார் தமிழ்ப் பள்ளி இருக்கக்கூடாது.
மேலும் பங்சார் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க 100 மடிக்கணினிகளை வழங்கப்படும்.
அதே வேளையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு 10,000 ரிங்கிட்டும், திறந்த வெளி மண்டபத்திற்கு தரமான கூரையை மாற்றி கொடுக்கப்படும்.
எனது நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் பலத்த கரவொலிக்கிடையே அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 4:51 pm
பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்
January 22, 2026, 12:59 pm
தொடக்கப்பள்ளியில் பகடிவதையா?: ஒன்றாம் ஆண்டு மாணவன் தாக்கப்பட வழக்கில் போலீஸ் விசாரணையை தொடங்கியது
January 22, 2026, 12:09 pm
பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்: டான்ஸ்ரீ நடராஜா
January 22, 2026, 11:33 am
RM2.12 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் இராணுவத் தளபதி தாம் லஞ்சம் பெறவில்லை என்று வாதம்
January 22, 2026, 11:24 am
மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்: இருவர் கைது
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
