செய்திகள் மலேசியா
மஇகா இன்னும் தேமுவில் தான் உள்ளது; வெளியேறுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம் மட்டுமே: ஸம்ரி
கோத்தா கினபாலு:
மஇகா இன்னும் தேசிய முன்னணியில்தான் உள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம் மட்டுமே.
அக்கூட்டணியின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர் இதனை கூறினார்.
மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் என்று இதுவரை தனது கட்சிக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
கூறு கட்சிகளின் உயர் தலைமைக்கு இடையிலான உறவு அப்படியே உள்ளது.
குறிப்பாக நல்ல நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.
மஇகா தொடர்ந்து தேசிய முன்னணி உடன்தான் பயணிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இது தொடர்பாக எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. மேலும் அது தேசிய முன்னணி கூட்டத்தில் விவாதிக்கப்படவே இல்லை.
இதுவரை எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் வெளியேறுகிறார்களா இல்லையா என்று கூறும் எந்த அறிக்கையும் இல்லை.
அதை நாங்கள் ஓர் உண்மையான ஆதாரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
கோத்தா கினபாலுவில் நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 21, 2026, 10:59 pm
தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக கெடா மாநில அரசு அறிவிக்க வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்து
January 21, 2026, 4:05 pm
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு உதவி நிதி: பிரதமர் வழங்குகிறார்
January 21, 2026, 3:34 pm
ஆறு வயதில் முதலாம் வகுப்பு திட்டத்தை அமல்படுத்த பள்ளிகளும் ஆசிரியர்களும் தயார்: ஃபட்லினா
January 21, 2026, 3:20 pm
நுரையீரல் தொற்று காரணமாக வீ கா சியோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
January 21, 2026, 1:25 pm
