செய்திகள் மலேசியா
மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்: இருவர் கைது
கோலாலம்பூர்:
‘இக்பால்’ எனப்படும் மனிதக் கடத்தல் கும்பலின் உள்ள இரண்டு வங்காளதேச ஆண்கள், தாமான் மலூரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டனர். அந்த இடம், சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
மலேசிய குடிவரவு துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸகாரியா ஷாபான் தெரிவித்ததாவது, இந்த நடவடிக்கையில் 27 முதல் 44 வயதுக்குட்பட்ட ஐந்து வங்காளதேச ஆண்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட குடியேற்றவர்களாக கைது செய்யப்பட்டனர்.
மேலும், தங்குமிட பராமரிப்பாளர், கும்பலின் போக்குவரத்து ஏற்பாட்டாளர் என சந்தேகிக்கப்படும் 56 வயது, 28 வயதுடைய இரு வங்காளதேச ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரின் பாஸ்போர்ட்களிலும் மலேசியாவிற்கு சட்டபூர்வமாக நுழைந்ததற்கான செல்லுபடியாகும் முத்திரை இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கை, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள குறுக்கு வழியின் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் பங்களாதேஷ் குடியேற்றவர்களைப் பற்றிய உளவுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
உளவுத் தகவல்களின் படி, இந்த குடியேற்றவர்கள் சமீபத்தில் கிளாந்தானில் குடிவரவு துறையால் முறியடிக்கப்பட்ட ‘இக்பால்’ மனிதக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள். தாமன் மலூரியின் அடுக்குமாடி குடியிருப்பில், கிழக்கு கரையிலிருந்து வந்த குடியேற்றவர்களுக்கான தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சோதனை, மனிதக் கடத்தல், குடியேற்றக் கடத்தல் தடுப்பு பிரிவு (ATIPSOM), புத்ராஜெயா குடிவரவு தலைமையகம், கிளாந்தான் குடிவரவு அமலாக்கம் ஆகிய பிரிவுகள் இணைந்து மேற்கொண்டதாகும்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 4:51 pm
பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்
January 22, 2026, 12:59 pm
தொடக்கப்பள்ளியில் பகடிவதையா?: ஒன்றாம் ஆண்டு மாணவன் தாக்கப்பட வழக்கில் போலீஸ் விசாரணையை தொடங்கியது
January 22, 2026, 12:11 pm
பங்சார் தமிழ்ப்பள்ளிக்கு 100 மடிக்கணினிகள்; இந்திய சமுதாயத்திற்கு கல்வியே சிறந்த முதலீடு: ஃபஹ்மி
January 22, 2026, 12:09 pm
பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்: டான்ஸ்ரீ நடராஜா
January 22, 2026, 11:33 am
RM2.12 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் இராணுவத் தளபதி தாம் லஞ்சம் பெறவில்லை என்று வாதம்
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
