செய்திகள் இந்தியா
தாஜ்மஹால் அறைகளை திறக்கக் கோரி வழக்கு தொடர்ந்த பாஜக: தள்ளுபடி செய்த நீதிமன்றம்
லக்னோ:
தாஜ்மஹாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரிய பாஜகவின் மனுவை அலஹாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நிராகரித்துள்ளது.
முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ் மஹால் உள்ளது. தாஜ் மஹாலைப் பார்க்க உலகெங்குமிருந்து சுற்றுப் பயணிகள் இந்தியாவிற்கு வருகிறார்கள். அதன் மூலம் கணிசமான அந்நிய செலாவணியை இந்தியா ஈட்டி வருகிறது.
தாஜ்மஹாலை நம்பி பல ஆயிரம் பேர் சுற்றுலாத்துறை மூலம் சம்பாதித்து வருகிறார்கள்.
தற்போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாக பாஜக நிர்வாகி ஒருவர் புதுக் கதையுடன் புகார் கூறி வழக்கு தொடர்ந்தார்.
இக் கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில், இருப்பதாகவும் வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பாஜக இளைஞர் அணி ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீதிமன்றம். அதனை கொண்டாடும் வகையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர் பாஜக ஆதரவாளர்கள். இதனை வரவேற்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) லக்னோ கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "உண்மை, எதுவாக இருந்தாலும் இந்த பிரச்சினைகள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டிய பணி. நீதிமன்ற நேரத்தை வீணாக்கக் கூடாது" என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதோடு இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
