
செய்திகள் உலகம்
விசாக தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் - மலேசியா எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்
சிங்கப்பூர்:
எதிர்வரும் விசாக தின விடுமுறையுடன் சேர்ந்த நீண்ட வாரயிறுதியில் துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியா, சிங்கப்பூர் போக்குவரத்து, குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாளை வெள்ளிக்கிழமையும் (மே 13), சனிக்கிழமையும் (மே 14) சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப் போலவே ஞாயிற்றுக்கிழமையும் (மே 15) அடுத்த திங்கட்கிழமையும் (மே 16) சிங்கப்பூருக்கு வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்.
தரைவழிப் பாதைகளின் மூலம் செல்லவிருப்போர் பயணத்தின்போது தாமதத்தை எதிர்நோக்க வேண்டிவரலாம்.
பயணிகள், தங்கள் பயணத் திட்டத்தைச் சரிவர வகுத்துக்கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று இரு நாட்டு (மலேசியா, சிங்கப்பூர்) போக்குவரத்து அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am